இந்நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அன்பு, காவல்துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் சார்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5,000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைத்தல், மக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை விளக்கிக் கூறினர்.
முன்னதாக, கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் விஜய் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 41 பேர் பலியான சம்பவம், தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் சூழலில், முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.