ஆனால், இரண்டு ஆண்டுகளில் அதாவது 1969 ல் அவர் திடீரென மறைந்ததையடுத்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.கருணாநிதி.
முன்கூட்டி நடத்திய மு.க. ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு!
ஐந்தாவது சட்டசபைக்கான தேர்தல் 1972 ல் நடக்க வேண்டியது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி அந்தக் கட்சியின் வழியிலேயே தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்பினார்.
வங்கதேசப் போரில் வென்ற இந்திரா அந்த வெற்றியை அறுவடை செய்ய பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அதே வழியில் தமிழகத்திலும் பதவிக்காலம் முடிய ஓராண்டு இருந்த நிலையில், சட்டசபை கலைக்கப்பட்டது. எனவே 71ல்நடந்தது.