மூகாம்பிகை கோயிலில் விஜய் தரிசனம்: எம்.ஜி.ஆர் பாணியில் வாள் காணிக்கை |Vijay Follows MGR’s Footsteps With Mookambika Temple Offering

Spread the love

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில்.

அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் ஒன்று காணிக்கையாக வழங்கி இருக்கிறார் விஜய்.

விஜய்யின் இந்தக் கோயில் விசிட்டை சாதாரண கோயில் விசிட் ஆக கடந்துவிட முடியாது.

காரணம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோரும் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இந்தக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

அதனால், விஜய் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுள்ளது கவனம் பெறுகிறது.

மூகாம்பிகை கோயிலில் விஜய் - வெள்ளி வாள்

மூகாம்பிகை கோயிலில் விஜய் – வெள்ளி வாள்

அதே மாதிரி வாளுக்கு ஒரு பின் கதை உண்டு.

1984-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது குணமாகி, தேர்தலிலும் வெற்றி பெற்ற பிறகு இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் எம்.ஜி.ஆர்.

அப்போது அவர் இந்தக் கோயிலுக்கு 1.5 கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கினார்.

அதே மாதிரி இன்று விஜய்யும் மூகாம்பிகை கோயிலுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இதுவும் விஜய்யின் மூகாம்பிகை கோயில் விசிட்டில் கவனம் பெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *