மூழ்கிய கப்பலில் உள்ள கால்சியம் கார்பைடால் கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; கவலை தெரிவித்த நீதிமன்றம்! | Calcium carbide in sunken ship; threat to coastal residents; Court expresses concern.

Spread the love

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது.

கப்பல் சாய்ந்த நிலையில் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் கப்பல் மூழ்கியது. எம்.எஸ்.சி எல்சா 3 கப்பல் விபத்தால் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கின. மேலும் கடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இப்போதும் ஆழ்கடலில் கன்டெய்னர்கள் மூழ்கிக்கிடக்கின்றன.

இந்தக் கப்பலில் மொத்தம் 643 கன்டெய்னர்கள் இருந்த நிலையில், இதுவரை வெறும் 72 கன்டெய்னர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கன்டெய்னர்கள் அனைத்தும் இன்னும் கடலின் அடிப்பகுதியிலும், மூழ்கிய கப்பலுக்குள்ளேயும் தான் உள்ளன. மூழ்கிய கப்பலில் 339.2 டன் கால்சியம் கார்பைடு உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பருவமழைக் காலத்தில் கடல் சீற்றம் அல்லது வலுவான நீரோட்டங்கள் காரணமாக இவைச் சிதைந்து கரை ஒதுங்கினால், கடலோரப் பகுதிகளில் பெரும் சேதமும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுமட்டுமன்றி பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய 70 கன்டெய்னர்களும் பருவமழை தீவிரமடையும்போது உடைந்து கடலில் பரவும் பேராபத்தும் நிலவுகிறது.

கேரள உயர்நீதிமன்றம்!

கேரள உயர்நீதிமன்றம்!

கப்பல் மூழ்கிய வழக்கு குறித்து கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது. ​தற்போது இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு தரப்பாகச் சேர்த்துள்ளது.

இந்த விபத்தின் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூட்டு ஆய்வு நடத்துவதற்காக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *