மேலும், காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது.
அதே சமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் நேரடியாகப் பணிநீக்கம் செய்யாமல், பணியாளர்கள் தாங்களாகவே முன்வந்து விலகும் ‘விருப்ப ஓய்வு’ (Voluntary Buyouts) திட்டத்தை வலியுறுத்திவருகிறது.

சுமார் 7 சதவிகிதம் கிட்டத்தட்ட 8,750 பேர் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரிய அளவிலான தொகையும், சிறப்பு சலுகைகளையும் கொண்ட இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
இந்த நிறுவனங்களின் பணிநீக்கம் டெக் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.