மேகதாதுவில் அமையவுள்ள சமநிலை நீர்த்தேக்கம் கர்நாடகாவுக்கு தண்ணீரை முறைப்படுத்த உதவுவதோடு, வறட்சி காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை உறுதி செய்ய வழிவகுக்கும். இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டுவதன் மூலம், நெருக்கடி காலங்களிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 177 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்குவதை எங்களால் உத்தரவாதம் செய்ய முடியும். மேலும் மாண்டியா, ஹாசன், சாமராஜநகர் மற்றும் துமகூரு போன்ற மாவட்டங்களுக்குத் தேவைப்படும்போது தண்ணீரைத் திறக்க முடியும்.
மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் முக்கியமானது. சொல்லப்போனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 177 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுவதில் நாங்கள் உறுதியாக இருப்பதால், இத்திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கே அதிகப் பயன் கிடைக்கும்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு, பெங்களூருவின் அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது. மேகதாது என்பது ஒரு சமநிலை நீர்த்தேக்கம் மட்டுமே. அனுமதிக்கப்பட்டதைத் தாண்டி ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட எங்களால் பாசனத்திற்குத் திருப்ப முடியாது. இத்திட்டம் முதன்மையாக குடிநீர் தேவையை நோக்கமாகக் கொண்டது. பெங்களூருவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் நகருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது.