வெறும் 4 சதவீத வாக்கு வித்தியாசமானது இத்தகைய பிரமாண்டமான அரசியல் விளைவை ஏற்படுத்துவது மிக அரிதான ஒன்றாகும். எனவே, இயல்பாகவே உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இத்தேர்தல் மம்தா பானர்ஜி மீதான ஒரு நேரடியான பொதுவாக்கெடுப்பாக அமைவதற்கு மாறாக, உண்மையில் யார் வாக்களிக்கும் வாய்ப்பைப் யார் பெற்றார்கள், யார் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முடிவை மாற்றிய SIR
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல்பாட்டில், சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இவர்களில், சுமார் 27 லட்சம் பேர் தங்களது வாக்குரிமைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
வெறும் 12-13 லட்சம் என்ற இறுதி வாக்கு வித்தியாசத்துடன் ஒப்பிடும்போது, நீக்கப்பட்ட வாக்காளர்களின் அளவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினர் மம்தா பானர்ஜிக்கு வாக்களித்திருந்தால் கூட, தொகுதி அளவிலான முடிவுகளில் அதன் தாக்கம் வித்தியாசமாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கும்.
2021-ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் கட்சி, பாஜக-வை விட சுமார் 60 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தது. வாக்கு சதவீதத்தில் சுமார் 10 சதவீதம் இடைவெளி இருந்ததுடன், இது 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காணப்பட்டது. ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்து, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.