அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, உதவி கமிஷனர் மற்றும் மூன்று பொறியாளர்கள் உட்பட நான்கு மாநகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே உத்தரவிட்டுள்ளார்.
சாகிநாகாவில் திறந்திருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து 55 வயது நபர் உயிரிழந்ததை அடுத்து, ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பணி நடைபெறும் இடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே கூறினார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் 1,03,934 மேன்ஹோல்கள் இருக்கின்றன. இவற்றில் 96,383 மேன்ஹோல்களில் பாதுகாப்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன, 1,800 மேன்ஹோல்கள் முந்தைய சாலைப் பணிகளின் போது மூடப்பட்டன. 4,446 மேன்ஹோல்களை திறந்துள்ளது.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்புதான், கிங் சர்க்கிள் பகுதியில் வெள்ளம் பாதித்த இடத்தை மேயர் ரிது தாவ்டே ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சில அடிகள் தள்ளி மாநகராட்சி ஊழியர் ஒருவர் திறந்திருந்த சாக்கடைக்குள் இடுப்பளவு ஆழத்தில் விழுந்தார்.