அப்போதுதான் உலகின் மிகக் கடினமான டிரையத்லான் (Triathlon) போட்டிகளில் ஒன்றான Ironman பற்றி தெரிந்துகொண்டேன். 3.8 கி.மீ. நீச்சல், 180 கி.மீ. சைக்கிள் ஓட்டம், 42.2 கி.மீ. மராத்தான் ஆகிய மூன்று பிரிவுகளையும் இடைவெளியின்றி தொடர்ந்து நிறைவு செய்ய வேண்டிய அந்தப் போட்டி என்னை மிகவும் ஈர்த்தது.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் Ironman போட்டியில் பங்கேற்றது எனக்கு மேலும் ஊக்கமளித்தது. நானும் அந்தப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினேன். தற்போது இரண்டாவது ஆண்டாக Ironman போட்டிக்காகத் தயாராகி வருகிறேன்.” என்றார்
மாணவர்களிடம் பேசும்போது, “40 வயதுக்கு மேல் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதைவிட, இப்போதே அதற்கான பழக்கத்தைத் தொடங்குங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தைப் பாதுகாப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடு” என்று கூறினார்.