ராகுல்-கிரண் ரிஜிஜு சந்திப்பு: பாஜக திட்டத்துக்கு காங்கிரஸ் ‘நோ’?|Rahul’s Firm ‘No’ to BJP Keeps Parliament Standoff Alive

Spread the love

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டு விடுகிறது.

இன்றும் இதே காட்சி தான். இன்றும் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒத்திவைப்பிற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 5) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அறையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா – இந்த இரண்டு மசோதாக்களையும் கொண்டு வருவதில் பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது.

இதற்காகவே கிரண் ரிஜிஜு ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இந்த இரண்டு மசோதாவிற்கும் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்கிறது பாஜக.

ஆனால், இந்த இரண்டிற்குமே உடனடியாகவே பெரிய “நோ’ சொல்லிவிட்டாராம் ராகுல் காந்தி.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்தும், காங்கிரஸின் ஒத்துழைப்பை வைத்தும் இந்தக் கூட்டத்தொடரில் இந்த இரு மசோதாக்களையும் அமல்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது பாஜக.

ஆனால், அது இப்போது நடக்காது போலும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *