இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். சி.வி.சண்முகம் உட்பட அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
மதுராந்தகம் – மரகதம் குமரவேல்,
தாராபுரம் – சத்யபாமா,
பெந்துறை – ஜெயக்குமார் ஆகிய எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.
இவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.