லெபனான் தாக்குதல் எதிரொலி: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தாமதம்|Israel-Lebanon Tensions Threaten US-Iran Peace Process

Spread the love

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

அமெரிக்கா, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே, “லெபனான் உள்ளிட்ட எங்கேயுமே இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது’ என்பது தான்.

தங்களால் லெபனான் மீது தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஈரான்.

ஆனால், இஸ்ரேல் நேற்று நள்ளிரவு, இன்று காலை என லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

ட்ரம்ப் – மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

இதனால், ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த டெக்னிக்கல் பேச்சுவார்த்தை தள்ளி சென்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக தங்களது குழுவை ஸ்விட்சர்லாந்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் ஈரான். ஆனால், லெபனான் மீதான தாக்குதலால் தங்களது குழுவை ஈரான் அனுப்பவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஈரான் போரை விரைவில் முடிக்க அமெரிக்கா முனைப்புடன் இருக்கிறது. ஈரான் இதை தங்களுக்கு சாதகமாக சற்று மாற்றி போரை முடிக்க வேண்டும் என்று ஈரானும் நினைக்கிறது.

ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *