ஏன் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது?
மனிதர்கள் உணவுக் கொடுக்கும் போது, வன விலங்குகள் உணவைத் தேடாது. இதனால், அவை உணவாகப் பழங்களைச் சாப்பிட்டு, விதைப் பரவல் செய்யும் இயற்கையான செயல்முறை அற்றுப்போகிறது.
இதனால், வன விலங்குகளால் உருவாகும் மரம், செடி, கொடிகள் தடைபட்டுப் போகிறது.
அது மட்டுமல்லாமல் மனிதர்கள் தரக்கூடிய உப்பு கலந்த சத்து இல்லாத ரொட்டிகள், சிற்றுண்டிகள் போன்ற உணவுக்கு அடிமையாகின்றன. இதனால் தான், குரங்குகள் சுற்றுலா தளங்களில் உணவுப் பொருட்களை பிடுங்கி சாப்பிட முயற்சி செய்கிறது.

இதுபோன்ற நேரங்களில் மக்கள் மற்றும் குரங்குகள் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதில் பலர் காயமடைகின்றனர். நாம் அறியாமையினால் செய்யும் சிறுசிறு தவறுகளினால் பெரிதளவில் காடுகள் உருவாவது பாதிக்கப்பட்டு தடைபடுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவர் செய்யும் தவறினால் மற்றவர்கள் பாதிப்படைகின்றனர். குரங்குகள் உணவுப் பொருட்களை மனிதர்களிடமிருந்து பிடுங்க முயற்சி செய்கிறது. அப்பொழுது தர மறுத்தால் மனிதர்களைத் தாக்கவும் நேரிடுகிறது. இதனால் மனிதர்களுக்கு வன உயிரினங்கள் மேல் கோபம் ஏற்படுகிறது.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் மனிதர்களாகிய நாம் எந்த ஒரு வன உயிரினத்திற்கும் உணவளிக்காமல் இருப்பதே நல்லது. அதுதான் நம் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும் நன்று, மனிதர்களுக்கும் நல்லது.