சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, “பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண்டிய கமிஷன் வரவில்லையே! வந்து கஜானாவில் குவிந்துகொண்டே இருக்குமே, அது நின்றுபோய்விட்டதே!
மணல் கொள்ளை நின்றுபோய்விட்டதே, டாஸ்மாக் கொள்ளை நின்றுபோய்விட்டதே, கதவைப் புறம்பாக அடைத்துவிட்டானே! இதற்கு என்ன வழி செய்வது? எப்படியாவது ஆட்சியைக்கவிழ்த்துவிட்டு, அதிமுக-வை ஆட்சியில் உட்காரவைத்து, நமது ஆதரவைக் கொடுப்போம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டார்கள்.
இ.யூ.மு.லீ கூட்டணி வைத்திருக்கும் தவெக, பா.ஜ.க-வுடன் ரகசிய பேரம் நடத்துகின்ற இழிவான செயலில் தவெக விஜய் கூட்டம் ஈடுபடவில்லை…ஈடுபடவும் செய்யாது.

என்னுடைய நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபர். சிறிது நேரம் அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னார், `இதற்கு முன்பு ஆட்சி இருந்தபோது, மாதம் ஒன்றரை கோடி ரூபாய் நாங்கள் கப்பம் கட்டினோம். ஐந்து ஆண்டுகள் மாதம் ஒன்றரை கோடி ரூபாய் கட்டியிருக்கிறோம். ஆனால், இப்பொழுது பத்து பைசாகூடக் கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது.