விஐபி வருகையால் பறிபோன உயிர்: ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பத்திரிகையாளர் உயிரிழந்த அவலம்! | Life Lost Due to VIP Arrival: The Tragedy of a Journalist Dying After Failing to Secure an Ambulance!

Spread the love

தாமதமாகவே அவரை போபால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். ஆனால், அவர் சிகிச்சையின்போது உயிரிழந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு விவசாய நிகழ்ச்சி தொடர்பான “விஐபி பணிகளுக்காகவே” மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.” எனக் குற்றம்சாட்டினர்.

அனைத்து ஆம்புலன்ஸ்களும் விஐபி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும், உடனடியாக மாற்று ஏற்பாடு எதையும் செய்ய இயலவில்லை என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யஷ்பால் பாலியன் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோகன் யாதவ்

மோகன் யாதவ்

இந்தச் சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துப் கருத்து தெரிவித்த, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இணை அமைச்சர் நரேந்திர படேல், “உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் எனது இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மருத்துவமனை நிர்வாகம் சார்ந்தவர்களோ, ஆம்புலன்ஸ் சேவை சார்ந்தவர்களோ – யார் தரப்பில் அலட்சியம் இருந்தது என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *