இது குறித்து ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனுடன் பேசி வந்தார். அந்தக் கட்சியில் தற்போது வன்னியரசு, ஜோதிமணி ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க முதலில் திட்டமிட்டனர். ஆனால், திருமாவளவனே அமைச்சராக வேண்டும் எனப் பலரும கூறியதால், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவை நிறுத்தலாம் என திட்டமிடுகிறார்கள். அப்படி ஒரு மூவ் எடுத்தால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருச்சி கிழக்கில் நிற்பதை தவிர்ப்பார் என த.வெ.க நினைக்கிறது.
வி.சி.க-வில் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் அது திருமாவளவனுக்கு கிடைக்கும். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க பரிந்துரை செய்துள்ளார்கள். விஸ்வநாதனுக்கு உயர்கல்விதுறையும், ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட உள்ளது.

த.வெ.கவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் ஐ.யு.எம்.எல் கட்சிக்கு ஓர் அமைச்சர் பதவியை தர முதல்வர் முன்வந்துள்ளார். பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. அவருக்கான துறையை முடிவு செய்யவில்லை. அதேபோல், த.வெ.கவில் கடலுார் ராஜ்குமார், பார்த்திபன், பர்வேஸ், தாஹிரா உள்ளிட்டவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க முடிவாகியுள்ளது.
அரசு அமைந்து பத்து நாள்களைக் கடந்தும் அமைச்சர்கள் நியமிக்காமல் இருப்பதால், பல துறைகளில் வேலைகள் நடக்காமல் இருக்கின்றன. இதனால், விரைவில் அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார். அ.தி.மு.க முகாமில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், அவர்களுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது” என்கிறார்கள்.