விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். அமைச்சரவை ஒரு குடும்பம் போல இருக்க வேண்டும். விசிகவும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள்

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர முயன்றார்கள். இன்னொரு பக்கம் திமுகவும் அதிமுகவும் புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயன்றனர். திமுக தங்களின் கொள்கைகளை மறந்துவிட்டு அதிமுகவுடன் இணைய முற்பட்டது. அந்த அதிருப்தியில்தான் சி.வி.சண்முகம் வெளியே வந்து பேசினார்.
அவர் அமைச்சர் பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ பேசவில்லை. அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம். அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும்’ என்றார்