பிறகு அங்கேயே கொஞ்ச காலம் படிச்சார். ரொம்ப அமைதியா இருப்பார். படிச்சிட்டிருக்கிற போதே சினிமா வாய்ப்புகள் அமைஞ்சுட்டதால அதுலயும் கவனம் செலுத்தினார். முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் ஷூட் லயோலாவில் நடந்தது. வகுப்பு முடிஞ்சதும் நேரா அங்க ஷூட்டிங் போவார்.
பிறகு நானும் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியில வந்துட்டேன். அதனால அதன் பிறகு தொடர்பு இல்லை. ஆனா எங்கயாச்சும் பார்த்தா என்னுடைய புரபசர்னு மரியாதையாப் பேசுவார்.
இன்னைக்கு அவர் படிச்ச, படிச்சிட்டிருக்கிற போதே முதல் படத்துல நடிச்ச அதே கல்லூரியில வெற்றிச் சான்றிதழை வாங்கி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா பதவியேற்கப் போறார்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. ” என்றார்.