விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; “தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது” – சீறும் அண்ணாமலை | Nainar’s controversial remarks about Vijay Annamalai lashes out

Spread the love

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கும் அமைச்சர் வன்னியரசு, ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய் - அமைச்சர் வன்னியரசு

முதல்வர் விஜய் – அமைச்சர் வன்னியரசு

பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எனக் கூறியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து கூறியிருக்கும் அண்ணாமலை, ”தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *