'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' – ரஜத் பட்டிதார் வியப்பு!

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணியில் இருந்து இந்த சீசனில் யாரும் சதம் அடிக்காமல் இருந்த நிலையில், 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், இந்த சீசனில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் கிங் கோலி. வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்

RCB vs KKR
RCB vs KKR

இது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். ஒவ்வொரு வீரரும் அணிக்குத் தேவையான பங்களிப்பை வழங்குகிறார்கள். நாங்கள் இப்போது ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணியின் ரன் ரேட் 10-11 என இருந்தது.

ஆனால் அதன்பின் நாங்கள் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களை 192 ரன்களுக்குள் முடக்கியது திருப்திகரமாக இருந்தது. கோலி எப்போதும் சிறந்த விஷயங்களையே செய்வார். அவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

Rajat Patidar
Rajat Patidar

அடுத்ததாக தர்மசாலாவில் நடைபெற உள்ள போட்டி இருக்கிறது. அது பேட்டிங்கிற்கு சாதகமான களம் என்பதால், அங்கேயும் வெற்றியைத் தொடர முயற்சிப்போம்,” என பேசியிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *