கடந்த சில போட்டிகளாக எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால், விராட் கோலி கேட்ச்சை நழுவ விடுவது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை அந்த கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.
தொடக்கத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இருந்தது. ஆனால், நடு ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்பினோம். விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான அந்தப் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றியது. விராட் கோலி எவ்வளவு ஆபத்தான வீரர் என்பது நமக்குத் தெரியும். சில நேரங்களில் போட்டிகளில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். பந்துவீச்சைப் பொறுத்தவரை, கார்த்திக் தியாகி செயல்படும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் தெளிவான மனநிலையுடன் பந்துவீசுகிறார், இது அணிக்கு ஒரு நல்ல விஷயம்,” என அவர் தெரிவித்தார்.