‘விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்…’ – காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர் | Ex-boyfriend’s brother stabbed and killed a college student who ended the relationship upon learning he was divorced

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார்.

ஆனால் இது குறித்து அமிர்தாவிற்கு சமீபத்தில் தெரிய வந்தது. இதனால் அமிர்தா தனது காதல் உறவை முறித்துக்கொண்டார். சம்பவத்தன்று மாலை கோடஹள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அமிர்தா நடந்து சென்றபோது தனுஷ் சகோதரர் சூர்யா அவரை வழிமறித்து தனது சகோதரருடனான உறவை ஏன் முறித்துக்கொண்டாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அமிர்தாவை சூர்யா கத்தியால் சரமாறியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவரை பொது மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த அமிர்தாவை போலீஸார் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

கத்திக்குத்து

கத்திக்குத்து

48 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிகிச்சை பலனலிக்காமல் அமிர்தா உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் அண்ணனின் காதலை நிராகரித்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று சூர்யா ஏற்கனவே அமிர்தாவை மிரட்டியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பொதுவெளியில் நடந்துள்ளது. இக்கொலை தொடர்பாக சூர்யா மட்டுமல்லாமல் தனுஷும் கைது செய்யப்பட்டுள்ளார். அமிர்தா மற்றும் தனுஷ் குடும்பம் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் மத நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து கலந்து கொண்டபோது அமிர்தா மற்றும் தனுஷ் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *