Cricket
oi-Yogeshwaran Moorthi
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். மீண்டும் ஒரு பவுன்சர் பந்தை அட்டாக் செய்து வைபவ் சூர்யவன்ஷி அவுட்டாகி இருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை விளாசி தள்ளினார். பவுண்டரியும், சிக்சருமாய் பறந்து கொண்டே இருந்தது. திடீரென கூடுதல் வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்று, வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் 20 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். இங்கிலாந்து டி20 தொடரில் 3 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த போதும், வைபவ் சூர்யவன்ஷியின் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இதனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூடுதலாக தடுமாறுவதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் எதிரணிகள் வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸையும், அவரின் முதிர்ச்சியின்மையை பயன்படுத்தி விக்கெட்டை கைப்பற்றுவது வாடிக்கையாகி வருகிறது. அவரை 2 பவுண்டரிகள் அடிக்கவிட்டு, அவர் ரெடியாக நிற்கும் நேரத்தில் கூடுதல் வேகத்தில் ஒரு பவுன்சர் பந்தை வீசுகின்றனர். அதனை சிக்ஸ் அடிக்க முயன்று வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை விட்டுவிடுகிறார்.
இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் போட்டுக் கொடுத்த பாதையை அப்படியே ஜிம்பாப்வே அணியும் பின்பற்றி வருகிறது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி கன்சிஸ்டன்சியுடன் ரன்கள் சேர்க்க, கொஞ்சம் நிதானமாகவும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அட்வைஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர்.