“சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன்.
அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம்.
சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஆனால், ஏ.ஆர். ரகுமானுடன் இதுவரை பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.
அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.