ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் | Aadhav Arjuna Demands Public Apology: Minister Issues Notice to MK Stalin

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: ஜான் பிரிட்டோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இவரின் நெருங்கிய நண்பர் என்றும், இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், முற்றிலும் உண்மைக்கு மாறாக மிகப்பெரிய குற்றச்சாட்டை, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அவதுறை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆதவ் ஆர்ஜுனா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கறிஞர் கூறுகையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து, அடிப்படை அற்ற, முற்றிலும் உண்மைக்கு புறம்பான, கற்பனையான அவதூறு குறறச்சாட்டுகளை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக கடந்த ஜூன் 8-ந் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து சர்ச்சைகான உண்மைப்பு புறம்பான கருத்துக்கள் பதிவிடப்பட்டிக்கிறது.

Aadhav Arjuna Demands Public Apology Minister Issues Notice to MK Stalin

அதில், ஜான் பிரிட்டோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இவரின் நெருங்கிய நண்பர் என்றும், இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், முற்றிலும் உண்மைக்கு மாறாக மிகப்பெரிய குற்றச்சாட்டை, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. கடத்தல் வழக்கில் சிக்கிய ஜான் பிரிட்டோவிற்கும், ஆதவ் அர்ஜூனா உறவினர் பி.ஜான் பிரிட்டோவிற்கும், எவ்வித தொடபும் கிடையாது.

தொடர்பில்லாத ஒருவரை தொடர்புபடுத்தி, ஆதவ் அர்ஜுனா அவரின் அரசியல் புகழையும், அரசியல் செல்வாக்கையும், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நற்பெயரையும், கெடுக்கும் வகையில், தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரின் தூண்டுதலின் பெயரில், கற்பனைக்கும் எட்டாத வகையில் முற்றிலும் பெய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். எனவே முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அவர் தனது கற்பனையான குற்றச்சாட்டுகளை, ஆதவ் ஆர்ஜூனாவை இழிவுபடுத்தும் வகையில் கூறிய குற்றச்சாட்டகளை 48 மணி நேரத்தற்குள் வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் வாபஸ் பெறவில்லை என்றால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சார்பாக இன்று மு.க.ஸ்டாலினுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். மேலும் இந்த விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் அவர் தனது மன்னிப்பை அனைத்து ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்க வேண்டும். ஆதவ் அர்ஜூனா மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 2 மாதம் சிறை தண்டனை வழங்கும் வகையில் கிரிமினல் வழக்கும் தொடரப்படும்.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும். இந்த குற்றச்சாட்டுகள் மூலம் பொதுவெளியில் நல்லவர்கள் அரசியலுக்கு வர கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற அவதூறு குற்றச்சாட்டுகள் வந்ததற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *