Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய முயற்சிகள் நடப்பதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. தற்போது மும்பை அணி கடந்த சீசனுக்கான ரிவ்யூவை நடத்தி வரும் நிலையில், எந்த அணிகளுடனும் எந்த வீரரையும் டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்கள் நடக்க இருக்கும் நிலையில், அத்தனை அணிகளும் டிரேட் பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. குறிப்பாக கடந்த சீசனில் மோசமாக ஆடிய கேகேஆர், லக்னோ, சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகள் டிரேட் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே லக்னோ அணி தனது கேப்டன் ரிஷப் பண்ட்டை டெல்லி அணிக்கு தாரை வார்த்துவிட்டது.

அதற்கு பதிலாக குல்தீப் யாதவை பெற்று கொண்டது. இதன்பின் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை நடப்பதாக பேச்சுகள் எழுந்தன. ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துவிட்டதாகவும், அவரை சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் டெல்லி ஆகிய 3 அணிகளும் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதற்கேற்ப ஹர்திக் பாண்டியாவும் மும்பை அணியை விட்டு விலகும் முடிவுக்கு வந்துவிட்டதாக மறைமுகமாக சிக்னல் கொடுத்து வருகிறார். தோனியின் ஜெர்சி எண்ணான 7 மற்றும் மஞ்சள் நிறத்தில் இதயம் ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா வருகிறாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்த நிலையில் மும்பை அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து கடந்த சீசனை ரிவ்யூ மேற்கொண்டு வருகின்றனர். தோல்விக்கான காரணங்கள் மட்டுமல்லாமல் வீரர்களின் வயது, அவர்களின் திறன், என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதன் இடையே மும்பை அணி நிர்வாகம் தரப்பில், எந்த வீரரையும் டிரேட் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் மும்பை அணி ஈடுபடவில்லை. ரிவ்யூ ஆலோசனைகள் முடிவடைந்த பின்னரே டிரேட் குறித்து பேசவே முடியும். எங்களின் வாய்ப்புகள் மற்றும் எண்ணங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க நேரம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.