ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன.
தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்தி இன்னும் மூடி தான் இருக்கிறது.
இந்தியாவிற்கு எரிசக்தி கொண்டு வரும் முக்கிய போக்குவரத்துப் பாதை “ஹார்முஸ் நீர்சந்தி’.
ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கு பல கப்பல்கள் அந்த வழியாக போர் தொடங்கிய நாள் முதலே வந்துக்கொண்டிருக்கின்றன.

“ஹார்முஸ் நீர்சந்தியில் இருக்கும் கடற்படையினரின் நலனை உறுதி செய்யவும், கடல்சார் போக்குவரத்துத் தடையின்றி நடைபெறவும் எங்கள் அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணிக்கும் ‘எம்.வி. மிசோஸ் கேஸ்’ (MV Misos Case) என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் வரும் வணிகக் கப்பல், மே 25-26-ம் தேதி இரவில் ஹார்முஸ் நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடந்தது.