100 கோடி கேட்டு கடத்தல்… ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி | Kidnapped in Mali for ₹100 Crore, Freed for ₹44 Crore — Indian Diamond Businessman’s Story

Spread the love

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் சுமார் ₹44 கோடி பணத்தை பேரமாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

75 வயதான தீரு ரமாணி, குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சூரத் நகரின் வைர வர்த்தகத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய அவர், பின்னர் தங்கச் சுரங்க முதலீட்டிற்காக மாலியில் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடத்தல்காரர்கள் ஆரம்பத்தில் சுமார் ₹100 கோடி பேரம் பேசி கேட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ₹44 கோடி வழங்கி விடுதலையை உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட பிறகும் தீரு ரமாணி தற்போது மாலியிலேயே உள்ளார். கடத்தல் மற்றும் விடுதலை தொடர்பான விவரங்கள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், மாலியில் வெளிநாட்டு தொழிலதிபர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *