பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாகவும், பெரிய விமான நிலையம் சென்னைக்கு இப்போது எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் இன்று சதுப்புநிலப் பாதுகாப்பு பற்றி சென்னையில் பேசுகையில் தெரிவித்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.
அவர் பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் சௌமியா அன்புமணி” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசியவர், “ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டு ஓடுதளங்களும் ஒன்றுக்கொன்று இணையாக இருக்க வேண்டும். ஆனால் சென்னை ஏர்போர்ட்டில் இரண்டு ரன்வேக்கள் செங்குத்தாக (Perpendicular) இருக்கின்றன.
இதனால் இரண்டு ரன்வேக்கள் இருந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது. இந்த ஏர்போர்ட் ரன்வே அடையாற்றின் மேலே 200 தூண்கள் எழுப்பி கட்டப்பட்டிருக்கிறது.
அடையாற்றில் வெள்ளம் வந்தால், அந்தத் தூண்களை அடைத்துக்கொண்டு தண்ணீர் நேராக ஏர்போர்ட்டிற்குள் நுழைந்துவிடுகிறது. ஒரு சின்ன மழை பெய்தாலே தண்ணீர் நிற்கிறது. இதனால் விமானங்கள், வாகனங்கள் பாதிக்கப்பட்டு 2-3 நாட்கள் ஏர்போர்ட்டையே மூட வேண்டிய நிலை வருகிறது.
A380, போயிங் 777 போன்ற பிரமாண்டமான சர்வதேச விமானங்கள் இறங்குவதற்கு ரன்வே 60 மீட்டர் அகலமும், போதுமான நீளமும், இரட்டை ஏரோபிரிட்ஜ் வசதியும் தேவை. ஆனால் இங்கு 45 மீட்டர் அகலம்தான் இருக்கிறது.