பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், மூன்று முறை, 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.
நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். 2029-இல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு நாங்கள் ஒத்த குரலில், ஒற்றைக்கட்டையாக நிற்போம்” எனப் பேசியிருக்கிறார்.