சென்னை கோட்டை கொத்தாளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் “கல்பனா சாவ்லா விருதை’ கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த் பெற்றார்.
யார் இவர்?
உலகப் புகழ் பெற்ற ‘தென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்’ போட்டியில் பங்கேற்றிருக்கிறார். உலகிலேயே மிக உயரமான இடத்தில் நடைபெறும் மாரத்தான் இது.
உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டியில் இவர் கலந்துகொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, தமிழ்நாட்டில் இருந்து இந்தப் போட்டியில் கலந்துகொண்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி இவர் தான்.
அதுவும் ஒருமுறை அல்ல… மூன்று முறை.
நோஷீன் எவரெஸ்ட்டில் 42.195 கி.மீ முழு மாரத்தான் தூரத்தையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.

“எனது ஆறு வயதில் ஓடத் தொடங்கினேன். சிறுவயதில் ஒரு பொழுதுபோக்காகச் சாதாரணமாய் ஆரம்பித்த இந்த ஓட்டம், நாளடைவில் என் எல்லைகளைத் தாண்டிச் சாதிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், விளையாட்டு மூலம் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கவும் வழிகாட்டிய ஒரு வாழ்நாள் பயணமாகவே மாறியது.