புத்தகத்தைத் தொகுக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) பாடப்புத்தகங்களில் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, 8-ஆம் வகுப்புப் புத்தகங்களில் மட்டும் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளன.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாடப்புத்தகங்கள் அனைத்தும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை விரைவில் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தவறு குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.