நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை வைத்துச் செல்ல கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான கட்டணமும் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிம்மதியாகத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும்.
கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.