“Action will be taken without discrimination, regardless of who committed the irregularities” says Minister Ramesh – ”முறைகேடு செய்தோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை”- அமைச்சர் ரமேஷ்

Spread the love

மன்னிப்பு கடிதம் அல்ல..

பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு தரிசனத்திற்காக கோயிலுக்குள் அழைத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளோம். அர்ச்சகர்கள் மட்டுமில்லாமல் அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில், இதுதொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் கேட்டு எழுதி வாங்கி மன்னித்து விட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவர்களிடம் விளக்கம் கேட்டுதான் கடிதம் பெறப்பட்டுள்ளதே தவிர மன்னிப்பு கடிதம் கிடையாது.

அமைச்சர் ரமேஷ் ஆய்வு

அமைச்சர் ரமேஷ் ஆய்வு

அன்னதானக்கூடம், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சொத்துப்பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய் விவரங்கள், தரிசனத்திற்காக பக்தர்களின் நேரத்தை குறைக்கும் வகையில் என்னென்ன வழிகள் மேற்கொள்ளலாம் எனவும் ஆய்து செய்துள்ளோம்.” என்றவரிடம்.

இன்று காலை தரிசனத்திற்கு உங்களிடமே ரூ.4 ஆயிரம் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இன்று காலை முதல் ஆய்வின் நிறைவு வரை என்னென்ன நடந்தது என்பதை முழு விளக்கத்துடன் கூடிய அறிக்கையாக மீடியாக்களுக்கு வழங்குகிறேன். சற்று பொறுத்திருங்கள்” எனக் கூறிச் சென்றார்.    

இதனிடையே திருச்செந்தூர் கோயிலில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *