AI NEXUS 2026: ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த உலக சாதனை!

Spread the love

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்

“ ஒரு தகவல் சொல்லி அனுப்பி இருக்காங்க. உங்களுக்கு பிடித்தவர் சொல்லி அனுப்பியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் சொன்னாரு. இந்த Youngsters, இந்த குழந்தைகள் நமது நாட்டுடைய அசையாத சொத்துக்கள். இங்க படிக்கிற அனைவருக்கும் இங்கேயே வேலை கொடுக்கணும். ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவருக்காக ஒரு உறுதிமொழி எடுப்போமா?”

என்று கூறி மாணவர்களின் நலனுக்காக உறுதிமொழி எடுக்கப்பட்டது. வெற்றி தமிழன் நாடு என்ற AI CITY க்கான ஒரு ஏ வி மாணவர்களின் முன்னே ஒளிபரப்பப்பட்டது. இது அவருடைய எதிர்கால விஷன் என்றும் கூறியிருந்தார்.

மேலும் உலகத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். AI NEXUS 2026 என்ற உலக சாதனைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பேசியவை:-

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் உலகளாவிய சாதனையைப் படைத்து மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளது. இந்த AI உச்சி மாநாடு அனைவருக்கும் ஒரு விழாவாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டை செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அதில் ₹1.5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையும் நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

இன்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டின் AI இலக்கை ஆதரிப்பதற்கும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இதற்காக ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி 1997 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று அது 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதில் சுமார் 3,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான படிப்புகளில் பயின்று வருகின்றனர்.

AI NEXUS 2026 என்பது ஒரு நாள் நிகழ்வு அல்லது ஒரு உலகச் சாதனை மட்டுமல்ல. இது இந்தியாவின் அடுத்த தலைமுறை AI புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கமாகும்.

இதன் தாக்கம் வரும் ஆண்டுகளில் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *