‘அந்த நிகழ்ச்சி இந்தியில வந்த காலத்துல இருந்தே நான் அதைப் பார்த்திட்டிருக்கேன். பையனும் பொண்ணும் தமிழ் பிக்பாஸ் தொடங்குனதுல இருந்து எல்லா சீசனையும் பாத்துட்டு வர்றாங்க.
இந்த சீசனுக்கு முதல் வாய்ப்பு வந்தது அவினாஷுக்குதான். அந்தச் சமயத்துல நானும் அக்ஷிதாவும் மலேசியாவுல இருந்தோம். எங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவினாஷ் எங்ககிட்டச் சொல்லல.
அக்ஷிதாவுக்கு நிக்ழ்ச்சி தொடங்குகிற ரெண்டு நாள் முன்னாடிதான் கூப்பிட்டாங்க. உடனே நாங்க, அவினாஷ்க்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அந்த தகவலை அவன்கிட்டச் சொல்லல.
ஆனா அக்ஷிதா வீட்டுல இருந்து கிளம்பி போன பிறகு, எங்கிட்ட வந்து பிக்பாஸ் போறேன்’னு சொல்லிட்டான் அவினாஷ்.
ஆனாலும் ரெண்டு பேரும் சர்ப்ரைஸ் ஆகட்டும்னு அக்ஷிதா போன தகவலை அவன்கிட்டயும் சொல்லல. ஆக மொத்தத்துல ரெண்டு பேருமே அந்த மேடையில ஏறின அந்த நொடிதான் தெரிஞ்சுகிட்டாங்க.
ஆளாளுக்கு இப்படி சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சதுல எல்லாம் திருஷ்டி பட்டுடுச்சோ என்னவோ, கடைசியில் எம் பொண்ணு எவிக்ட் ஆகி அது மொத்த குடும்பத்துக்கே பெரிய ஷாக் ஆகிடுச்சு. ஏன்னா, அவினாஷை விட அக்ஷிதாவுக்குதான் அதுல கலந்துக்கணும்கிற ஆசை அதிகம்.
ஒருநாள் அப்செட்டில் இருந்தவ பிறகு நார்மலாகிட்டா’ என்றவரிடம்
அவினாஷ் எப்படி விளையாடுகிறார்? நூறு நாட்கள் தாக்குப் பிடிப்பாரா என்றோம்.