சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல் முதல் டெண்டர், ரகசிய ஆவணங்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை.
இந்தத் திருட்டு கடந்த மே 16, 17-ம் தேதிகளில் நடந்ததாக தெரிவிக்கின்றனர்.

மின்வாரியத் தலைமையகம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும் என்கிற கோணத்தில் இந்தச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனாலும், அவற்றுடைய பேப்பர் ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்கிற அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இது நிர்வாகப் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.