அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய வரியை அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அமெரிக்கா-கனடா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி செய்தியாளர்களிடம், “அமெரிக்கா, கனடாவிற்கு விதித்த வரிகளுக்கு இணையாக டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் புதிய வரிகள் விதிக்கப்படும். எஃகு, எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த வரி விதிப்பில் அடங்கும்.
கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு கனடாவும் இணையான வரிகளை விதிக்கும்.