தி.மு.க. சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் எந்த சாதிக்கும் எதிரானவள் இல்லை. நான் கட்சி மாறவில்லை. ஆனால் நீங்கள் பேசுவதை பார்க்கும்போது, கட்சி மாறலாம் என தோன்றுகிறது.
நான் கட்சி பணத்தில் 10 பைசா அனுபவிக்கவில்லை. செலவுதான் செய்துள்ளோம். திறமையில்லாதவர்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். கைக்கு அடக்கமான வாய் பேசாதவர்களுக்கு தான் பொறுப்பு தருகிறார்கள். ஒரு கம்பெனி வளர வேண்டுமென்றால் திறமையானவர்கள் இருக்க வேண்டும். அதுபோல கட்சி வளரவும் திறமையானவர்கள் இருக்க வேண்டும்.
என்னை ஒதுக்கினால் நான் குறைந்து போக போவதில்லை. எதற்கு நான் பயப்பட வேண்டும்? எனது கட்சி பதவியை எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள். தலைவரிடம் சொல்லி பதவியை எடுக்க சொல்லுங்கள்” என குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

’ஒற்றுமை இருந்தால் தான் வெல்ல முடியும்’
இதேபோல கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன் தனது முகநூல் பக்கத்தில், “பொத்தாம் பொதுவாக கவுன்சிலர்கள் தான் தி.மு.க தோல்வி அடைந்தது என்று முகநூலில் பதிவு போடுவதை நிறுத்தி விடுங்கள். கட்சியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தால். கட்டாயம் வென்று இருக்கலாம். இவங்களுக்கு சீட் குடுத்தா அவங்களுக்கு பொறாமை. அவங்களுக்கு சீட் குடுத்தா இவங்களுக்கு பொறாமை. இவங்களுக்கு எதுக்கு நம்ம வேலை செய்யனும் அப்படிங்கிற எண்ணம் இருக்கும் வரையில் ஒன்றும் செய்ய முடியாது. முதலில் ஒற்றுமையாக இருந்தால் தான் எதையும் வெல்ல முடியும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவுகள் கோவை தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.