இந்தக் கேள்விக்கான பதிலை யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. காரணம், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. தங்கத்திற்கான தேவை அதிகரிப்பது, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது, போர்ப் பதற்றம் என பல காரணங்களினால் தங்கத்தின் விலை நிர்ணயமாகிறது.
இப்போதுள்ள சூழலில், உலக அளவில் போர்ப் பதற்றம் நிலவுவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலேயே இருக்கிறது. இதனால், ரூ.1,56,000-ஆக இருக்கும் 10 கிராம் தங்கத்தின் விலை, 2030-க்குள் ரூ.1,71,000 வரை இந்த ஆண்டில் உயர்ந்ததைப் பார்ப்போம். அடுத்த 4 ஆண்டுகளில் தங்கம் விலை ரூ.2,00,000 என்கிற அளவுக்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
நிபுணர்களின் இந்தக் கணிப்பு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்! எனவே, எல்லாப் பணத்தையும் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல், கொஞ்சம் தங்கம், கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம்!