சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.
சென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “ப்ளெம்மிங்குடனான 18 ஆண்டுகால அசாத்திய பயணம் மறக்க முடியாதது. சென்னை அணியின் தொடக்கக் காலத்திலிருந்து அவர் எங்களுடன் பயணித்தார்.