இதன் மூலம் மத்திய அரசுக்கு 1,601 கோடி ரூபாயும் எந்த வித பிடித்தமும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. 46,470 சதுர அடி கொண்ட இக்கட்டிடத்திற்கு மாநில அரசு தனது பல்வேறு அலுவலகங்களை மாற்ற இருக்கிறது.
வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்களையும் இந்த கட்டிடத்திற்கு மாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு வாடகையை சேமிக்க முடியும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆறு மாதங்களுக்கும் மேலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கட்டிடத்தில் உள்ள சில மின்தூக்கிகள் (lifts) இயங்கவில்லை. மேலும், கட்டிடத்தின் உட்புறத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பல உள்ளன. கட்டிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்பதால், மையக் குளிரூட்டும் அமைப்புகூடச் செயல்படவில்லை. அவை அனைத்தையும் சரி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் இக்கட்டிடமும் தாக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ், அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்தித்து, அந்தக் கட்டிடத்தைப் விற்பனை செய்யும் போது மாநில அரசுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தினார். அந்தக் கட்டிடத்தை வாங்குவதற்கான போட்டியில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.