Nepal Flood: Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பிஹாருக்கு அச்சுறுத்தல்!| live | live | Nepal flash flood live update

Spread the love

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 105 இந்தியர்கள் உள்பட பல நூறு பேர் மாயமாகி உள்ளனர்.

16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தவிர இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் துயர சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், ” நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் பாலேந்திர ஷா அவர்களைத் தொடர்புகொண்டு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்த கடினமான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளுடன் உறுதுணையாக நிற்கிறார்கள்.

நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நமது குழுக்கள் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *