ஆனால், அதுவரை சரியாக விளையாடாத தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர், தனது பழைய அணியைப் பிளே-ஆஃப் கொண்டு செல்ல வேண்டும் எனத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வந்த வழியே பெவிலியன் அனுப்பி வைத்தனர். அதிலும் குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் நான்கு முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இருந்தாலும், பஞ்சாப் அணியின் எண்ணிக்கை இருபது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எட்டியது.
201 எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணையினர் சிறப்பான தொடக்கத்தை அளித்து, வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தினர். வெற்றி இலக்கை எட்டிவிடலாம் என ஆடிக் கொண்டிருந்த மும்பை பேட்டர்கள், ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்களை விட ஆரம்பித்தனர்.