ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த தோல்வியின் மூலம், குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயம் குஜராத் அணிக்கு உருவாகியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
“பிட்ச் இப்படி இருந்தது எங்களுக்கு ஆச்சரியமா என்று கேட்டால், உண்மையில் இல்லை. 12வது, 13வது ஓவர் வரை நாங்கள் போட்டிக்குள் நன்றாகவே இருந்தோம். ஆனால் எங்களுடைய பீல்டிங் சரியாக இல்லை. சில கேட்ச்களை தவறவிட்டோம்.