கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கலான மத்திய பட்ஜெட்டில், Sovereign Gold Bond (SGB) குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“மூலதன ஆதாய வரி ரத்து’ என்பது மட்டும் பலருக்கும் பாதி புரிந்தது… ஆனால், அது யாருக்கு… எப்படி என்கிற ஏகப்பட்ட குழப்பங்கள் மக்களிடம் இருந்து வருகின்றன.

“SGB – இது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் தங்கப் பத்திரம் ஆகும். இது பிசிக்கல் தங்கத்திற்கு நல்ல மாற்று. மேலும், இதை இந்திய ரிசர்வ் வங்கியே வழங்குவதால், இதில் பாதுகாப்பும் மிக அதிகம்.
‘இப்போது நகை வேண்டாம். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதில் பாதுகாப்பும் வேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு நல்ல நண்பன் இந்தத் தங்கப் பத்திரம்.
முதலீடு என்பதைத் தாண்டி, சாவரின் கோல்டு பாண்டிற்கு ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டியும் கிடைக்கிறது.
இந்தப் பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தில், அப்போதைய தங்க மதிப்பைப் பொறுத்து நமக்கு தொகை கிடைக்கும்.
இது தான் சாவரின் கோல்டு பாண்டின் சின்ன இன்ட்ரோ.