வேலை இல்லை, வேலை இல்லை என்று மக்கள் சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தொழிற்சாலைகள் அமைப்பது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
10 லட்சம் ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் கடன் இருக்கிறது. இந்தக் கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன திட்டங்கள் இருக்கிறது என்று அறிவிக்கவில்லை. பல லட்சம் கோடிகள் இன்று கடனாக மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
பட்ஜெட்டில் பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் நகர்புற மேம்பாட்டிற்காக கூவம் நதியை சுத்தம் செய்வது சாலைகளை மேம்படுத்துவது, எலெக்ட்ரானிக் பேருந்துகள் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.
ஆனால் இதெல்லாம் இன்று சொல்லாக இருந்தது. செயல் வடிவமாக வரும்போது தேமுதிக அதனை நிச்சயம் வரவேற்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.