நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதி த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய லோகேஷ் தமிழ்செல்வன், தி.மு.க அமைச்சர் மதிவேந்தனை தோற்கடித்து வெற்றி வாகைச் சூடினார். தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்?
அ.தி.மு.க – வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செல்வன், அ.தி.மு.க- வில் இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தவர். 2024- ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற ( தனி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அ.தி.மு.க- வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் சபாநாயகருமான தன்னுடைய தந்தை தனபாலுக்கு கட்சிக்குள் போதிய மரியாதை இல்லையெனக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். உடனடியாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பதிவேற்றுள்ளார்.