அதுமட்டுமா? பெரும் பொருட்செலவில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜனநாயகக் கடமையாற்ற வந்த அந்த வாக்காளர்களை நாம் கைகூப்பி வணங்க வேண்டாமா?.
தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் திருவிழா, ஜனநாயகத் திருவிழா என்பதன் உண்மையான அர்த்தம் நேற்றுதான் (ஏப்ரல் 23, 2026) உணரப்பட்டது.
ஆயினும், இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழக தேர்தல் அரசியலுக்குப் புதிய இலக்கணம் எழுதிய தமிழக மக்களாகிய என் பாட்டி, என் தாய், என் சகோதரிகள், என் தாத்தா, என் தந்தை, என் சகோதரர்கள் என எனது ஒட்டுமொத்தக் குடும்ப உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக, நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நமது வாக்குச்சாவடி முகவர்கள், நமது கட்சித் தோழர்கள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள். “உங்களுக்கு என்ன அரசியல் தெரியும்? உங்களால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?” என்று கேலி செய்தவர்களுக்கு, உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும். நமது கட்சித் தோழர்களுக்குத் துணையாக நின்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்” என்று விஜய் பதிவிட்டிருக்கிறார்.