கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இதில் சில மாணவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வாகியிருந்தனர். ஆனால், இங்கிலாந்து அரசு சமீபத்தில் மாற்றிய விசா நடவடிக்கைகளால், இந்த மாணவர்களுக்கு விசா கிடைக்கவில்லை.
இந்தப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கான கடைசித் தேதியும் நெருங்குகிறது.
இதனால், இந்தப் பிரச்னையை உடனே தீர்க்குமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது…
“தமிழ்நாடு அரசின் ‘அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ கீழ் தேர்வான மாணவர்கள், UK மாணவர் விசா பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து உங்களின் அவசரக் கவனத்திற்குக் கொண்டுவரவே இக்கடிதம்.
இத்திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலத் தேர்வு செய்யப்பட்டனர்.